இந்தியாவுக்குள் நுழைந்த எக்ஸ்இ (XE) வகை கொரோனா – பீதியில் மக்கள்! ஒருவருக்கு தொற்று உறுதி!
தற்போது எக்ஸ்இ (XE) எனும் புதிய கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. மற்ற வைரஸை விட இந்த வைரஸ் வீரியமிக்கதாக உள்ளது. தற்போது எக்ஸ்இ (XE) வைரஸ் மும்பையில் உள்ள ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்இ (XE) வகை கொரோனா:
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த கொரோனா தொற்றினால் பல லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் காலமாயினர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது பொது இடங்களுக்கு வரும் போது மாஸ்க் அணிந்து தான் வர வேண்டும் எனவும், முடிந்த அளவுக்கு பொது இடங்களில் நடமாடுவதை தவிர்க்கும்படியும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படியும் அறிவிக்கப்பட்டது.
இந்த கட்டுப்பாடுகளை மக்கள் ஓரளவுக்கு பின்பற்றியதால் தான் கொரோனா தொற்று குறைந்தது. இந்நிலையில் சீனா முதலான அண்டை நாடுகளில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. இதனை தொடர்ந்து சீனாவில் பிஏ.2 என்னும் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா பரவி வருவதாக புதிய ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் ஒமைக்ரானின் பிஏ.2 வகை புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரு வைரஸும் கலந்து எக்ஸ்இ (XE) எனும் வைரஸ் பரவி வருகிறது. மற்ற கொரோனா வைரஸை விட எக்ஸ்இ (XE) எனும் வைரஸ் வீரியம் மிக்கதாக உள்ளதாக கூறப்பட்டது.
ஏப்ரல் மாதம் மீதமுள்ள விடுமுறை நாட்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! முழு விபரம் இதோ
அதிக வீரியம் மிக்க எக்ஸ்இ (XE) எனும் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் மும்பையில் ஒருவருக்கு பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதன் முதலில் இங்கிலாந்தில் தான் எக்ஸ்இ (XE) எனும் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.