CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – எழுத்துத் தேர்வுகளுக்கு முன்னதாக Webinar பயிற்சி!
சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் ஆப்லைன் முறையில் தேர்வுகளை எழுதவிருக்கும் நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதற்காக வெபினார் நடத்த இருப்பதாக CBSE வாரியம் அறிவித்துள்ளது.
சிறப்பு வகுப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஏப்ரல் 26 ம் தேதியான நாளை முதல் சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான் 2வது போர்டு தேர்வுகளை தொடங்க இருக்கிறது. இப்போது, போர்டு தேர்வுகள் நடைபெறும் ஒரு நாளைக்கு முன்னதாக, தேர்வுக்கான தயாரிப்புகளை விளக்க CBSE வாரியம் நேரடி வெப்காஸ்ட் வகுப்புகளை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு CBSE மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுவதால் இந்த வகுப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது குறித்து CBSE வாரியம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘கொரோனா காரணமாக, கடந்த காலங்களில் தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பதால் அட்டவணைக் கொள்கைகளின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மே 21 முதல் ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
அதன்படி, தேர்வு செயல்முறையில் வாரியம் முழுமையாக ஈடுபடவில்லை. இதனால் பல முக்கியமான சிக்கல்கள் பற்றி அறிந்திருக்க முடியாது. ஆனால் இந்த ஆண்டு தேர்வுகள் சுமூகமாக நடத்தப்படுவதற்கு அனைத்து செயல்பாட்டாளர்களும் முக்கியமான தகவல்களை தெரிவிப்பதன் மூலம் வாரியத்திற்கு உதவுவது அவசியமாகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, CBSE வாரியத்தின் புதிய தலைவர் வினீத் ஜோஷி வெபினாரில் சிறப்புரையை தொடங்க இருக்கிறார்.
ExamsDaily Mobile App Download
இது குறித்து அவர் கூறும் போது, ‘வெபினார், தேர்வை வெற்றிகரமாக நடத்தும் திறன்களுடன் பங்கேற்பாளர்களை முழுமையாக தயார்படுத்துகிறது. இது எதிர்காலத்தில் ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் நீக்கும் மற்றும் உங்கள் உதவியுடன் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்த முடியும். அனைத்துப் பள்ளிகளும் இந்த வெபினாரில் கலந்து கொள்வது கட்டாயம்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா காரணமாக 2 முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும், 2023ம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கு ஒரு ஆண்டுத் தேர்வு மட்டுமே இருக்கும் என்று சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது.