நிறுவனத்தின் பங்குகள் 98% வீழ்ச்சியால் பணக்காரர் பட்டத்தை இழக்கும் சீனர் – அதிர்ச்சி விவரம்!
உலகின் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்த சீனாவை சேர்ந்த லாரி சென் என்ற முன்னாள் ஆசிரியர் தனது ஆன்லைன் கல்வி வணிகத்தால் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் கோடீஸ்வரர் பட்டத்தை இழந்துள்ளார்.
நிறுவனத்தின் வீழ்ச்சி:
சீனாவில் மக்கள் தொகை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், நாட்டில் அதிக அளவில் வயதானவர்கள் பணி புரியும் நிலை வந்துள்ளது. நாட்டில் இளைஞர்கள் குறைபாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. இதே நிலை நீடித்தால் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த விகிதத்தில் மட்டுமே இருக்கும் என்றும் அதனால், இனி சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்கள் 30 வினாடி முக கவசத்தை நீக்கலாம் – ஐ.ஓ.சி அனுமதி!
ஆனால் நாட்டில் கல்விக்கான செலவுகள் அதிக அளவில் இருப்பதால் சீனர்கள் அரசின் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் சீன நாட்டில் கல்வி லாப நோக்கத்தில் கற்பிக்கப்பட்டால் அந்த நிறுவனங்களின் உரிமை றது செய்யப்படும் என்று சீன அரசு அறிவித்தது. மேலும், பள்ளி பாட திட்டங்களை லாப நோக்கத்திலும், அதன் மூலம் அதிக வருவாய் பெறுபவர்களின் நிறுவனங்களை தடைசெய்து சீனா அரசு கடந்த சனிக்கிழமை புதிய விதிமுறைகளை வெளியிட்டது.
இதனால், சீன குக்கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பள்ளி ஆசிரியரான லாரி சென், உலகின் பணக்காரர்களில் ஒருவராக இருந்தார். அரசு அவரது ஆன்லைன் கல்வி வணிகத்தை அதிக லாபமடையும் நிறுவனம் என்ற வகையில் தடை செய்துள்ளது. இதனால் அவரது பில்லியனர் பட்டத்தை அவர் இழந்துள்ளார். கௌட்டு டெச்செடு இன்க் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சென், நியூயார்க் வர்த்தகத்தில் தனது ஆன்லைன்-பயிற்சி நிறுவனத்தில் பங்குகள் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்