உலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய தகவல்கள்

0

       உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு ஆகும். தவத்திருதனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ம் ஆண்டு, தில்லியில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது.

1964 ஜனவரியின் ஆரம்பத்தில் புதுதில்லியில் நடந்த 26வது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின் போது தான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவரும் மாநாட்டிற்கு கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச் ஜனவரி 7 ஆம் நாள் உத்தியோகப் பற்றற்ற முறையிலே புதுதில்லியில் கூடி அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை தோற்றுவித்தனர்.

மாநாடுவிவரம்
முதல் மாநாடுதனிநாயக அடிகளார் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 தேதிகளில் நடத்தப்பட்டது .
இரண்டாம் மாநாடு  எம் . பக்தவத்சலம்   முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச்   சென்னையிலே   திமுக இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்த முன்வந்தது . அது  1968  ஆம் ஆண்டு   சனவரி 3-10 ஆம்   நாட்களில் சென்னையிலே நடந்தது .
மூன்றாவது மாநாடுபேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970 இலே நடத்தினார் . முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் பெரும் வித்தியாசம் . சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது . இம்மாநாடு 1970 சனவரி 15-18 காலப்பகுதியில் நடைபெற்றது .
நான்காவது மாநாடுமாநாட்டை   யாழ்ப்பாணத்தில்   நடத்துவதற்கு பேராசிரியர்   சு . வித்தியானந்தன்   தலைமையிலான குழு தீர்மானித்து அதன் படி  1974  சனவரி 3-9  காலப்பகுதியில் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக நடத்தியது . மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள் ,  சனவரி 10  ஆம் நாள் , பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்தில் காவல்துறையினரும் குண்டர்களும் பொதுமக்களைத் தாக்கியதில்  11 பேர் கொல்லப்பட்டனர் .
ஐந்தாவது மாநாடுமுதலில் நடைபெற்ற 4 மாநாடுகள் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் நடைபெற்றவை . அவரது மறைவுக்குப் பிறகு , 5- வது மாநாட்டைத் தொடர்ந்து நடத்தப் போதிய வசதியில்லாமல் மன்றத்தின் வேகம் குறையைத் தொடங்கியது . பிற நாடுகளில் இருந்தும் , இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் தமிழறிஞர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாததே இதற்குக் காரணமாகத் தெரிகிறது . ஐந்தாவது மாநாடு 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981- ம் ஆண்டு சனவரி 4-10 இல் மதுரையில் நடத்தப் பெற்றது .
ஆறாவது மாநாடு6- வது மாநாடு  1987 நவம்பர் 15-19 கோலாலம்பூரில்   நடத்தப் பெற்றன .
ஏழாவது மாநாடு ஆப்பிரிக்காவில்   மொரீசியசில்  7- வது மாநாடு 1989  டிசம்பர் 1-8  இல் நடத்தப் பெற்றன.  
எட்டாவது மாநாடு எட்டாவது மாநாடு   தஞ்சாவூரில்  1995  சனவரி 1-5  இல்   நடத்தப் பெற்றன .  
ஒன்பதாவது மாநாடுஎட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி 2010 இல் கோவையில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு . கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் 2009 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் , காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தார் . பின்னர் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தப் போதிய கால அவகாசம் இல்லை என்று கூறி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒப்புதல் தர மறுத்து விட்டது . இதனால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயர் மாற்றப்பட்ட ஒரு மாநாடு 2010 சூலையில்கோவையில்நடைபெற்றது. அதிகாரபூர்வமான 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2015 சனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது.கோலாலம்பூரில்உள்ள மலாயாப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவை கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன. இம்மாநாட்டுக்கான கருப்பொருள் "உலகமயக் காலக்கட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல்" என்பதாகும்.
10வது உலக தமிழ் மாநாடுஇந்த மாநாடு 2019-ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பே 2018-ஆம் ஆண்டே  நடத்த தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாகவும், அந்த மாநாட்டை மதுரையில் நடத்தவும் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.இந்த மாநாட்டிற்கு உலகம் முழுவதும் இருந்து தமிழ் அறிஞர்களையும் ஒருங்கிணைத்து, அவர்களையும் வரவழைக்கலாம் என்பது தமிழக அரசு திட்டமாக இருக்கிறது.

PDF Download

Download Banking Awareness PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்
Telegram சேனலில் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!