நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பரவல்….கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு – பங்கு சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி!!
உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் இந்த நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
கொரோனா பரவல்
உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்து தற்போது அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு மீண்டு வருகின்றன. ஆனால் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்நாட்டு அரசாங்கம் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது . இதனால் பொதுமக்கள் பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளார்கள். அத்துடன் பாங்காங் நகரில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். மேலும் அதிபர் ஜி ஜின் பிங்க் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். அதன் காரணமாக சீனாவில் சர்வதேச சந்தைகளில் பங்குகளின் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதா – விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதல்.. அமைச்சர் தகவல்!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அத்துடன் ஐரோப்பிய ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக முதலீட்டாளர்கள் பெரும் வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். மேலும் இனிவரும் காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால் போக்குவரத்து மற்றும் பல்வேறு வகையான தொழில்கள் உற்பத்தி திறன் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும். இத்தகைய காரணங்களால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.