மூச்சை முட்ட வைக்கும் உலக மக்கள் தொகை தொகை – 800 கோடியை எட்டியுள்ள நிலை!
தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் மக்கள் தொகை எண்ணிக்கை அதிக முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை:
மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், இனி வரும் காலத்தில் பூமியில் மக்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்து வந்தனர். ஆனால், தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
உலகின் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா சபை உலகின் மக்கள் தொகை 800 கோடியை நெருங்கும் என்று முன்னதாகவே கணித்துள்ளது. மேலும், 700 கோடியில் இருந்து உலகின் மக்கள் தொகை 800 கோடியாக மாறுவதற்கு கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகவும், ஆனால் 900 கோடியை எட்டுவதற்கு 15 ஆண்டுகள் ஆகும் என்றும், இந்த விகிதம் உலகின் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து வருவதை காட்டுவதாகவும் ஐநா சபை தெரிவித்துள்ளது.
நவ.14 குழந்தைகள் தினவிழா – இன்றைய நாளின் உறுதி மொழி.. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
Exams Daily Mobile App Download
குறிப்பாக, 2050ம் ஆண்டில் உலகின் 50% மக்கள் தொகையானது பிலிப்பைன்ஸ், தான்சானியா,எத்தியோப்பியா, நைஜீரியா, இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து போன்ற நாடுகளிலேயே அடங்கி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.