உலக மக்கள் தொகை 8 பில்லியனை தாண்டும் – ஐ. நா சபை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஐ. நா சபையின் தகவலின் படி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை:
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 11ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1989-ம் ஆண்டு முதல் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை நடத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அதிகரித்து வரும் மக்கள் தொகை சில நாடுகளில் உணவு, வேலை போன்ற அத்தியாவசிய தேவைகளில் பற்றாக்குறையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 1960ம் ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி உச்சத்தை தொட்டது. அதன் பிறகு 1962 மற்றும் 1965ம் ஆண்டுகளில் மக்கள் தொகையின் வருடாந்திர வளர்ச்சி 2.1% ஆக அதிகரித்தது.
நாடு முழுவதும் நவ.19 வங்கிகள் வேலை நிறுத்த போராட்டம் – முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் வரும் 15ம் தேதிக்கு பிறகு உலக மக்கள் தொகை 8 பில்லியனை தாண்டும் என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது. இது 1950 ஆம் ஆண்டில் இருந்த 2.5 பில்லியனை விட மூன்று மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் 2030 ஆண்டில் உலக மக்கள் தொகை சுமார் 8.5 பில்லியனாகவும் 2050 இல் 9.7 பில்லியனாகவும் 2080 ம் ஆண்டில் சுமார் 10.4 பில்லியனாகவும் உயரும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.