ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்க வேண்டாம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
நாட்டு மக்கள் அனைவர்க்கும் முழுமையாக தடுப்பூசிகள் செலுத்தாமல் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தளர்வுகள் வேண்டாம்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. உலகமே இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் முதல் பரவத் தொடங்கிய வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தினர். தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள் நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தனர். மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டினர்.
நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு – ஜூன் 30 வரை கருத்துகேட்பு!
அதன் விளைவாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்தது. இந்த தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகிறது. கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாக்கிறது. எனவே அனைவரும் தடுப்பூசிகள் செலுத்தி கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக தொற்று பரவல் குறைந்து வருகிறது. அதனால் நாடுகள் ஊரடங்கை தளர்த்தி வருகின்றனர். பொது மக்களும் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
ஆனால் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் முழுமையாக தடுப்பூசிகளை இன்னும் செலுத்தவில்லை. இந்த நிலையில் ஊரடங்கை தளர்த்துவது ஆபத்தாகும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு அதிகரிக்கும். கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தாமல் தளர்வுகளை அமல்படுத்துவது ஆபத்தில் தான் முடியும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஒவ்வொரு நாடும் தங்கள் மக்கள் தொகையில் 10 சதவீத மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்த வேண்டும். மேலும் இந்த வருட முடிவிற்கும் இது 30% ஆக உயர வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.