பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – உலக சுகாதார அமைப்பு!
பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கடத்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அனைத்து நாடுகளும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. முதலாவதாக நாடுகள் அனைத்தும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்தது. கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி நிலை குறித்த அச்சம் பெற்றோர்களிடம் எழுந்துள்ளது.
Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பணம் செலுத்தாமல் ரீசார்ஜ் செய்யலாம்!
மேலும் 3ம் அலை வரும், அது குழந்தைகளை அதிகளவில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதானல் இந்த வருடமும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு கல்வியின் மீது உள்ள ஆர்வம் குறைகிறது எனவும் சமூகம், மனநலம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆன்லைன் கற்றல், வகுப்பறை கற்றல் போல் இல்லை எனவும் இல்லை என கூறுகின்றனர். மற்றொரு புறம் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது. தற்போது தடுப்பூசிகள் பயன்பாடு மற்றும் ஊரடங்கின் நன்மைகளால் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலையை கருத்திற்கொண்டு பள்ளிகளில் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க கோடைகால விடுமுறையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பரவலை தவிர்க்க பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனைகளை செய்ய வேண்டும், அதன் பின் பள்ளிகளை திறக்க வேண்டும். அதில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மட்டும் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.