‘ஆரோக்கியமான உலகத்தை கட்டமைப்போம்’ – இன்று (ஏப்ரல் 7) உலக சுகாதார தினம்!!
இன்று உலக சுகாதார தினத்தை மையமாக கொண்டு உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமான உடல் நலத்தை பெற வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுகாதார தினம்:
இன்று, ஏப்ரல் 7 உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் முதலாவது கூட்டம் 1948 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக உடல்நலம், மனநலம், குழந்தை பராமரிப்பு, பருவநிலை மாற்றங்களை மையமாக வைத்து ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு ‘ஆரோக்கியமான உலகத்தை கட்டமைப்போம்’ என்ற தலைப்பின் கீழ் உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடும் நோக்கில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஆண்டு உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பொதுவான சுகாதார குறைபாடுகளை கண்டறிந்து அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் சுகாதார தினத்தை கடைபிடிப்பதற்கான முக்கிய நோக்கமாகும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் 32% உயர்வு – அரசு ஆலோசனை!!
2021 ஆம் ஆண்டிற்கான மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாக இருப்பது கொரோனா தொற்று. ஏழை, பணக்காரர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைத்து மக்களையும் பாரபட்சம் பார்க்காமல் வருத்தி வருகிறது இந்த கொடிய வைரஸ். உலக அமைப்புகளும், வல்லரசு நாடுகளும் கூட நடுங்கும் வண்ணம் ஒரு சூழலை உருவாகியுள்ளது கொரோனா வைரஸ்.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – நாளை முக்கிய அறிவிப்பு!!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களை ஊக்கப்படுத்தும் விதமாக ‘ஆரோக்கியமான உலகத்தை கட்டமைப்போம்’ என்ற தலைப்பில் இந்த ஆண்டு உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மக்கள் ஆரோக்கியமான உடல்நலத்தை பெற்று வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறது உலக சுகாதார அமைப்பு.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்