‘உயிர் காக்கும் உன்னத சேவை’ – உலக ரத்த தான தினம் இன்று!
உலகம் முழுவதும் இன்று (ஜூன் 14) ரத்த தான தினம் அனுசரிக்கப்பட்டது வருகிறது. நம்மில் பலருக்கு ரத்த தானம் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாத பட்சத்தில், ரத்த தானம் செய்வது குறித்து ஊக்குவிக்க இத்தினம் உலக சுகாதார அமைப்பால் நிறுவப்பட்டது.
ரத்த தான தினம்:
மனித உயிரின் மூலதனம் என்றால் அது ரத்தம் தான். ஒருவற்கு ஏற்படும் சிறிய காயங்கள் துவங்கி அறுவை சிகிச்சை செய்வது உள்ளிட்ட அனைத்து மருத்துவ முதலுதவிக்காக தேவைப்படும் காரணிகளில் முக்கியமானது இந்த ரத்தம். காரணம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் மக்கள் அவசரமாக பயணிக்க நேரிடுகிறது. சாலைகளில் தடுப்புகள், கட்டுப்பாடுகள் ஆகியவை விதிக்கப்பட்டிருந்தாலும் விபத்து என்ற ஒன்று மாற்ற முடியதாகி விட்டது.
தமிழக அரசின் பட்டா தகவல் ஆன்லைன் மூலம் பெறும் வழிமுறைகள் – பொதுமக்கள் கவனத்திற்கு!
பொதுவாக ஒரு செய்தித்தாள்களை பிரித்தாலே, அதில் முதல் பக்கம் துவங்கி கடைசி பக்கம் வரை விபத்து, மரணம் என பல செய்திகள் இடம் பெற்றிருக்கிறது. இப்படி நேரிடும் அனைத்து விபத்துகளிலுமே மக்களின் உயிர் காக்கும் சேவைகளில் ரத்தம் தேவைப்படுகிறது. பொதுவாக விபத்துகள் தவிர தலசீமியா, ரத்த கசிவு நோய் போன்றவற்றுக்காகவும் சிகிச்சை பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ரத்தம் தேவைப்படுகிறது. அதாவது உலக அளவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் 7 பேரில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.
முன்பெல்லாம் பணத்துக்காக தான் ரத்தம் வழங்கப்பட்டது. ஆனால் பின் நாட்களில் இது தானமாக மாறியது. அதே போல தானத்தில் சிறந்தது கண் தானம் என்ற நிலை மாறி தற்போது ரத்ததானம் தான் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ரத்தம் பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதங்களில் ரத்தம் வித்தியாசப்படுகிறது. அந்த வகையில் A, B, மற்றும் O உள்ளிட்ட ரத்தத்தின் பல வகையான பிரிவுகளை மருத்துவ உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் கார் லேன்ஸ்டைனர் என்பவர் ஆவார்.
TN Job “FB Group” Join Now
பின்னாளில் உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், ஜூன் 14 ஆம் தேதியை உலக ரத்த தான நாளாக அனுசரித்து வருகிறது. அந்த வகையில் மருத்துவ காரணங்களுக்காக ரத்த தானம் செய்யும் ஒருவருக்கு, அடுத்த 48 மணி நேரத்தில் புதிய ரத்தம் உருவாகும். மேலும் ஒருமுறை ரத்த தானம் செய்தவர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு ரத்த தானம் செய்ய கூடாது. அதன் படி பல உயிர்களை காக்கக்கூடிய ரத்தத்தை தானமாக கொடுக்கும் சேவைகளை செய்ய பலரும் முன் வர வேண்டும் என ஊக்குவிக்கும் வகையில் உலக ரத்ததான தினம் ஆண்டு தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.