ஆப்கானிஸ்தானுக்கான நிதி உதவியை முடக்கிய உலக வங்கி – தலிபான்களுக்கு சிக்கல்?

0
ஆப்கானிஸ்தானுக்கான நிதி உதவியை முடக்கிய உலக வங்கி - தலிபான்களுக்கு சிக்கல்?
ஆப்கானிஸ்தானுக்கான நிதி உதவியை முடக்கிய உலக வங்கி - தலிபான்களுக்கு சிக்கல்?
ஆப்கானிஸ்தானுக்கான நிதி உதவியை முடக்கிய உலக வங்கி – தலிபான்களுக்கு சிக்கல்?

ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது கட்டுப்படுத்தியுள்ளதான தலிபான்களுக்கு தங்களது சேவையை தொடர விருப்பமில்லை என அறிவித்துள்ள உலக வங்கி அந்நாட்டுக்கு கொடுத்து வந்த உதவிகளை தற்போது முடக்கியுள்ளது.

சேவைகள் முடக்கம்

ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்களுக்கு இடையே நடைபெற்ற 20 ஆண்டு கால போரில் அந்நாட்டு க்கு கை கொடுத்து வந்த அமெரிக்கா உள்ளிட்ட சில அரசுகள் அங்கிருந்து வெளியேறியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர நல்லுறவும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆப்கானில் இருந்து மற்ற நாடுகளுக்கு செயல்பட்டு வந்த ஏற்றுமதி பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பின்னர் திறப்பு – பொதுமக்களுக்கு அனுமதி!

இந்நிலையில் உலக வங்கியும் ஆப்கானிஸ்தானுக்கு கொடுத்து வந்த உதவிகளை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி சார்பிலான செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பின்னர், அங்குள்ள சூழ்நிலைகள் குறிப்பாக பெண்களின் உரிமைகள் குறித்து ஆழ்ந்த அக்கறையை தெரிவித்து கொள்கிறோம். மேலும் அந்நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளில் உள்ள தாக்கம் குறித்து கவலை கொண்டுள்ளோம்.

இருப்பினும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த உலக வங்கி நடவடிக்கைகளை இடைநிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உலக வங்கி, சர்வதேச சமூகம் மற்றும் அதன் பங்காளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தும்’ என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் மற்ற நாடுகளுடன் இணைந்து எங்களது ஆதாயங்களை பாதுகாக்கவும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும் முயற்சித்து வருகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இதற்கு முன்னதாக உலக வங்கி அதன் மேம்பாட்டிற்காக, கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 5.3 பில்லியன் டாலர்களை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வருகிறது. மேலும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஏற்கனவே 370 மில்லியன் டாலர் கடன் திட்டம், அத்துடன் 340 மில்லியன் டாலர் சிறப்பு வரைதல் உரிமைகள் (SDR) ஆகியவற்றை ஆப்கானில் இருந்து திரும்ப பெற்றுள்ளது. தவிர தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின் படி, ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்து வந்த உலக வங்கியின் பணியாளர்கள் அனைவரும் கடந்த வாரத்தில் அந்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!