தமிழகத்தில் உணவகங்கள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் உணவகங்கள் செயல்படும் நேரத்தை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என சென்னை ஹோட்டல்கள் சங்க கவுரவ தலைவர் சீனிவாச ராஜா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
உணவகங்களின் நேரம் நீட்டிப்பு?
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14 முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு நோய் பரவல் அடிப்படியில் தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது. உணவகங்கள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. அதனால் குறிப்பிட்ட நேரம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் உணவங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண தடை விதிக்கப்பட்டது.
ஹரியானாவில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு – CA தேர்வுகளை நடத்த அனுமதி!
தற்போது ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்கள் உணவகங்களில் இரவு 8 மணி வரை அமர்ந்து உண்ண அனுமதிக்கப்பட்டுள்ளது. 50 % இருக்கைகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி கூட்ட நெரிசலை தவிர்த்து உணவகங்கள் இயங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பார்சல் சேவை இரவு 9 மணி வரை நடைபெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
சென்னையில் 4,000 ஹோட்டல்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கால் உணவக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இரவு 8 மணி வரை வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்தலாம் என்கிற நேரத்தை 9 மணி வரை நீட்டிக்க வேண்டி சென்னை ஹோட்டல்கள் சங்க கவுரவ தலைவர் சீனிவாச ராஜா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஹோட்டல்களை இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.