இந்தியாவிலும் வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

0
இந்தியாவிலும் வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை திட்டம் - மத்திய அரசு ஆலோசனை!
இந்தியாவிலும் வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை திட்டம் - மத்திய அரசு ஆலோசனை!
இந்தியாவிலும் வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

இந்தியாவில் மத்திய அரசு விரைவில் நான்கு நாட்கள் வேலை திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்திற்கு பெரும்பாலான தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

4 நாட்கள் வேலை திட்டம்:

உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மட்டும் கட்டுப்பாடுகள் காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய நிறுவனங்கள் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிப்புகள் சற்று குறைய ஆரம்பித்தது. அதன் பிறகு ஊழியர்கள் அலுவலகத்தில் வந்து பணி புரிய அனுமதி அளித்தது. இந்த நிலையில் நாடுகள் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் பணிபுரியும் முறையை கொண்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நான்கு நாட்கள் வேலை என்ற சோதனை திட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வருக்கு கடிதம்!

இந்த சோதனை முயற்சியை ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ச் பல்கலைக்கழகங்கள் & பாஸ்டன் கல்லூரி ஆகியவை ஒருங்கிணைத்து நடத்துகிறது. வங்கிகள், மருத்துவமனைகள் உள்பட அனைத்து நிறுவனங்களும் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை நாளாகும் 3 நாள்கள் விடுமுறை நாளாகவும் உள்ளது. இந்தியாவிலும் இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை திட்டம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் செயலர் அபூர்வா சந்திரா கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

இந்த நான்கு நாட்கள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டால் ஊழியர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். மேலும் மற்றும் 3 நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தால் உற்பத்தியில் எந்த விதமான பாதிப்பும் இருக்காது. தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு எந்தவிதமான நிர்ப்பந்தமும் செய்யப்போவதில்லை கலாச்சாரத்திற்கும் ஏற்ப இந்த மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் படி பணி ஓய்வுக்குப் பிறகு பெறப்படும் பணமும், பணிக்கொடைத் தொகையும் அதிகரிக்கும். அதனால் பல தொழிலாளர்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் ஷிப்ட் எண்ணிக்கை குறையும் என்று ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!