திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகப்பணியாளர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பங்கள் அனுப்ப 10.09.2021 கடைசி நாள் ஆகும்.
கடைசி நாள் அறிவிப்பு:
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகப்பணியாளர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக பட்டதாரி/ முதுகலை பட்டதாரி (10+2+3 முறை), சமூகப்பணி/உளவியல்/ வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றுப்படுத்துநர் கல்வி தகுதியாக பட்டதாரி (10+2+3 முறை), உளவியல், சமூகவியல் அல்லது சமூகப்பணியில் பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் திட்டம்?
மேலும் அரசு பணிக்கான அனுபவமாக குழந்தைகளுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதில் 2 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் கணினி இயக்குதல் அனுபவம் அவசியம். இந்த பணிகளுக்கான வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க வேண்டும்.மேற்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமான ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களாகும்.
இது மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகையால் இதனை அடிப்படையாக கொண்டு எவ்விதத்திலும் அரசு பணி கோர இயலாது. மேலும் மேற்கண்ட பணியிடங்களுக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை புகைப்படத்துடன் 10.09.2021 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அறை எனள்:633, 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர், என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்பப்பட வேண்டும். மேலும் விபரங்கள் தேவைப்படின் 0421-2971198-க்கு தொடர்பு கொள்ளவும்.