தமிழக அரசு துறைகளில் கருணை அடிப்படையில் பணி? உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!
தமிழகத்தில் அரசு துறைகளில் பணிபுரிந்தவர்கள் உயிரிழந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கருணை அடிப்படையில் பணி:
தமிழக அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள் திடீரென உயிரிழந்துவிட்டால் அவர்களின் பணியை வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் கருணை அடிப்படையிலான பணியை தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் என கோருவது அத்திட்டத்திற்கு எதிரானது என்றும் அதனை உரிமையாக கோர முடியாது என தெரிவித்தார்.
மேலும் கருணை அடிப்படையிலான பணி என்பது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உடனடி பொருளாதார தீர்வுக்கு தான். இதை நீண்ட காலம் காத்திருப்பில் வைக்க இயலாது. கருணை அடிப்படையில் பணி கோருபவர் பணியில் இருந்தவர் உயிரிழந்த 3 ஆண்டுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இந்த வழக்கில் பணியில் இருந்தவர் உயிரிழந்த 3 ஆண்டுக்கு பதிலாக வயது வரம்பு பூர்த்தி ஆனதிலிருந்து மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 17) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
Exams Daily Mobile App Download
அது மட்டுமில்லாமல் மருத்துவ காரணங்களுக்காக 53 வயதுக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள், பணியின் போது இறக்கும் அரசு ஊழியரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு புதிய நடைமுறையை வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி கருணை அடிப்படையிலான பணிகள் பிரிவு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அரசு ஊழியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் இரண்டு லட்ச ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.