TCS, Infosys, Wipro, HCL Tech ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவிற்கு வரும் Work From Home?
கொரோனா தொற்று பரவல் நாட்டில் குறைந்து வருவதால் அனைத்து நிறுவனங்களும் பணியாளர்களை நேரடியாக அலுவலகத்திற்கு அழைக்க தொடங்கியுள்ளது. இது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
WORK FROM HOME:
நாட்டில் கோவிட்-19 பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், வீட்டில் இருந்தே வேலை செய்வதை நிறுத்திக் கொள்ளவும், அனைத்து ஊழியர்களையும் தங்கள் அலுவலகங்களுக்குச் செல்லுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் ஒரு அறிக்கையில் முடிவை அறிவித்ததையடுத்து, இந்த விதி ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலான கோவிட்-19 நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, தினசரி நோய்த்தொற்றுகள் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளன.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்!
மத்திய பணியாளர்கள், மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் பிப்ரவரி 6, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, பிப்ரவரி 7, திங்கட்கிழமை முதல் 100 சதவீத பணிகளையும் அலுவலகத்தில் வந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்யும் பழக்கம் மத்திய அரசு பணியாளர்களுக்கு முடிவிற்கு வந்துள்ளது. ஆனால் ஊழியர்கள் எல்லா நேரங்களிலும் முககவசங்களை அணிவதையும், அவர்கள் அனைத்து நேரங்களிலும் கோவிட் பொருத்தமான நடத்தையை தொடர்ந்து பின்பற்றுவதையும் துறைகளின் தலைவர் உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் வலைப்பயிற்சியில் MS தோனி!
இதேபோல், நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) டிசம்பரில் இருந்து அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனாவின் ஓமைக்ரான் பரவல் மூலம் 3ம் அலை தாக்குதல் பரவி வந்ததால் அந்த முடிவு தள்ளிவைக்கப்பட்டது. பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, காக்னிசென்ட், வீட்டிலிருந்து பணியை தொடரும் என்று கூறியது. இன்ஃபோசிஸின் நிர்வாக துணைத் தலைவரும் மனிதவளத் தலைவருமான ரிச்சர்ட் லோபோ, இனி வரும் நாட்களில் நிறுவனம் கலப்பின முறையில் இயங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.