Wipro நிறுவனத்தில் முடிவுக்கு வந்த WFH முறை – தலைவர் அறிவிப்பு!
கொரோனா பேரலை காரணமாக செயல்படுத்தப்பட்ட WFH முறை 2 ஆண்டுகளுக்கு பின்னர் முடிவுக்கு வரும் நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர்கள் மட்டும் அலுவலகங்களுக்கு வருகை தர அனுமதிக்கப்படுவார்கள் என்று விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
அலுவலகம் வரவழைப்பு
கடந்த மார்ச் மாதம் முதல் உருவான கொரோனா பேரலையால் இந்தியாவில் உள்ள பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை WHF முறைக்கு மாற்றியது. கொரோனா பரவலுக்கு மத்தியில் செயல்படுத்தப்பட்ட இந்த WHF முறை கிட்டத்தட்ட 18 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இதற்கிடையில் நாடு முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வந்துள்ள சூழலில் பல்வேறு நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை மீண்டுமாக அலுவலகத்திற்கு வரவழைத்து கொண்டிருக்கிறது.
Reliance Jio வின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் – OTT தளங்களுக்கு இலவச சந்தா!
அந்த வரிசையில், விப்ரோ நிறுவனமும், கிட்டத்தட்ட 18 மாத இடைவெளிக்குப் பிறகு தங்களது ஊழியர்களை அலுவலகங்களுக்கு வரவழைக்க இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி அறிவித்துள்ளார். அறிவிப்பின் படி, 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே மட்டுமே அலுவலகங்களுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்பும் போது வெப்பநிலை பரிசோதனைகள் மற்றும் QR குறியீடு ஸ்கேன் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
இதற்கிடையில் Wipro நிறுவனம், கடந்த ஜூலை மாதம் முதல் இந்தியா முழுவதும் இருக்கும் தனது 2 லட்சம் ஊழியர்களில் 55% பேருக்கு தடுப்பூசி செலுத்தி இருப்பதாக தலைமை மனிதவள அதிகாரி சவுரப் கோவில் தெரிவித்துள்ளார். அதே போல செப்டம்பர் மாதத்திற்குள் தனது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான TCS தெரிவித்துள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சுமார் 70-80% பணியாளர்களை மீண்டும் அலுவலகத்திற்கு எதிர்பார்ப்பதாக TCS அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.