Infosys நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – WFH முடிகிறதா?
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்கி உள்ளன. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனம் கடந்த வாரம் தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனம்:
கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் தங்களது வீடுகளில் இருந்தே பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடந்த 1.5 ஆண்டுகளாக வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் இன்போசிஸ் நிறுவனம் கடந்த வாரம் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது.
HCL நிறுவனத்தில் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய தகவல்!
அதில், இன்போசிஸ் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் பணிகளுக்கு ஏற்ப, சில ஊழியர்கள் அலுவலகத்திற்கு கட்டாயம் வர வேண்டிய நிலை இருப்பின், அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடு உடன் அலுவலகத்திற்கு வந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அதில் தெரிவித்துள்ளார். அதே போல நிறுவனத்திற்கு நேரடியாக வரும் ஊழியர்களுக்கு சில தளர்வுகளை வழங்கி உள்ளது. மேலும் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெளிவாக தெரிவித்துள்ளது.
அதே போல நிறுவனத்தில் வேலை செய்யும் குழு உறுப்பினர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் சில ப்ராஜெக்ட்களுக்கு ஏற்ப வாடிக்கையாளரின் தேவை இருப்பின், அந்த ஊழியர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்து செல்லலாம். மேலும் அலுவலகத்திற்கு வரும்போது கட்டாயம் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் புதிதாக தேர்வு செய்யப்படும் பணியாளர்களையும் அலுவலகத்திற்கு அழைத்து அவர்களுக்கான பயிற்சியை வழங்க திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு அலுவலகத்தில் தேவையான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்ய நிறுவனம் தற்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 1.5 ஆண்டாக வீட்டிலிருந்தே பணிபுரிந்து பழகிப்போன ஊழியர்களுக்கு இனி மீண்டும் அலுவலகம் சென்றால் என்னென்ன சிக்கல்கள் எதிர்கொள்ள காத்திருக்கிறது என பார்க்கலாம்.