TCS, Infosys, HCL ஐடி நிறுவன பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முடிவுக்கு வர இருக்கும் Work From Home!
TCS, Infosys, HCL முதலிய ஐடி நிறுவன ஊழியர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வீட்டில் இருந்து தான் பணியாற்றி வருகின்றனர். தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
Work From Home அறிவிப்பு
கொரோனா காலக்கட்டத்தில் இருந்தே தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுமே வீட்டில் இருந்து தான் வேலை பார்த்து வந்தனர். ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை பார்த்தே பழகிவிட்டனர். கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ள காரணத்தினால் ஊழியர்களை மறுபடியும் அலுவலகங்களுக்கு அழைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போதைக்கு மூத்த ஊழியர்கள் மட்டும் நேரடியாக அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். மீதமுள்ள 95% ஊழியர்களும் வீட்டில் இருந்தபடியே தான் வேலை பார்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் – அமைச்சர் அறிவிப்பு!
அதுவும் சில ஐடி நிறுவனங்களில் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் மட்டும் அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்க்கும்படி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதுமட்டுமல்லாமல் இந்த கொரோனா கால கட்டத்திற்கு பிறகு Tcs, Infosys, Hcl போன்ற ஐடி நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. இதனால் கூடுதலாக ஊழியர்களை பணியமர்த்தவுள்ளனர். தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ் மற்றும் HCL போன்ற முன்னனி ஐடி நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடலை பின்பற்ற இருப்பதாக அறிவித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதற்கிடையே டாடா கன்சல்டன்சி நிறுவனம் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் ஊழியர்களின் விருப்பத்திற்காக 25 × 25 அணுகுமுறையை பின்பற்ற முடிவு செய்துள்ளது. அதிலும் இந்த திட்டத்தை மூன்று கட்டங்களாக செயல்படுத்தவுள்ளனர். ஊழியர்களுக்காக இயக்க மண்டலங்கள் (OOZ) மற்றும் ஹாட் டெஸ்க்குகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய 25 சதவீத ஊழியர்களுக்கு மேல் தேவைப்படாது. மேலும், அலுவலகத்தில் செலவிடும் நேரத்தை குறைக்கவும் முடியும். மேலும், ஊழியர்களை விரைவாக அலுவலகங்களுக்கு அழைக்க நிறுவனம் திட்டமிட்டு கொண்டிருக்கிறது.