மீண்டும் அலுவலக ஊழியர்களுக்கு அமலாகும் வீட்டிலிருந்து வேலை முறை – கொரோனா பாதிப்புகள் எதிரொலி!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வழக்குகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், மில்லியன் கணக்கான தொழிலாளர்களை இப்போது வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு சீனாவின் பெய்ஜிங் நகர நிர்வாகம் வலியுறுத்தி இருக்கிறது.
வீட்டிலிருந்து வேலை
சீனாவின் ஷாங்காய் நகரை தொடர்ந்து இப்போது தலைநகர் பெய்ஜிங்கிலும் கொரோனா புதிய பாதிப்புகள் எழுச்சியடைய துவங்கி இருக்கிறது. இப்போது ஷாங்காயில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதை அறிந்த குடியிருப்பாளர்கள், முழு ஊரடங்கை தவறாக நிர்வகித்தால் பெய்ஜிங்கிலும் இதே போன்ற நிலைமை உருவாகலாம் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில் பெய்ஜிங்கில் உள்ள அனைத்து அலுவலக ஊழியர்களும் மீண்டும் தொலைதூர வேலைக்கு அதாவது WFH முறைக்கு திரும்புமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்த நிலையில், வணிக மாவட்டத்தின் தெருக்கள் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் கவனத்திற்கு – நாளை கடைசி வாய்ப்பு!
மேலும் கொரோனா வைரஸ் தடுப்புகளால் முடக்கப்பட்ட தேசிய விடுமுறைக்குப் பிறகு இப்போது பெய்ஜிங்கில் உள்ள ஏராளமான சுரங்கப்பாதை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இப்போது தொற்றுநோயின் ஆரம்ப நாட்களிலிருந்து மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்த்துப் போராடுவதால், சீன அதிகாரிகள் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் முதற்கட்ட நடவடிக்கையாக முழு ஊரடங்கு மற்றும் வெகுஜன சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் பெய்ஜிங்கில் நேற்று (மே 5) ஒரு நாளில் 50 உள்ளூர் வழக்குகள் பதிவாகியுள்ளன.
Exams Daily Mobile App Download
இதனால், அம்மாகாணத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டமான சாயோங்கில் உள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மாவட்டத்தின் 3.5 மில்லியன் குடியிருப்பாளர்களில் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியவர்கள் தாங்களாகவே வாகனம் ஓட்டவும், ஒன்று கூடுவதைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, பெய்ஜிங்கில் குறைந்தது ஒரு ஊழியரை வீட்டிலிருந்து வேலை செய்ய நிர்வாகம் ஊக்குவித்துள்ளது. இதற்கிடையில் ஷாங்காயில் கடந்த 24 மணிநேரத்தில் 4,600க்கும் மேற்பட்ட அறிகுறியற்ற நோய்த்தொற்றுகள் மற்றும் 13 இறப்புகள் பதிவாகியுள்ளன.