Work From Home ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு? பிரபல நிறுவனம் திட்டம்!
முன்னணி நிறுவனமான கூகுள் நிரந்தரமாக வீட்டில் பணிபுரிய அனுமதி வாங்கிய ஊழியர்கள் மற்றும் நகரங்களை விட்டு வேறு இடங்களுக்கு குடியேறிய ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பள குறைப்பு:
உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளிலும் ஊரடங்குகளும், கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக பிரபல நிறுவனங்களான கூகுள், ட்விட்டர், பேஸ்புக் போன்ற நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிகின்றனர். வீட்டிலிருந்து பணிபுரிவதால் அலுவலகங்களுக்கு செல்லும் வேலை இல்லை. அதனால் பெரும்பாலானோர் நகரங்களை விட்டு தனது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.
செப்டம்பர் 1ம் தேதி 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் பிரபல நிறுவனமான கூகுள் நிரந்தரமாக வீட்டில் பணிபுரிய அனுமதி வாங்கிய ஊழியர்கள் மற்றும் நகரங்களை விட்டு வேறு இடங்களுக்கு குடியேறிய ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. கூகுளை தொடர்ந்து ஒட்டுமொத்த அமெரிக்க சிலிக்கான் வேலி நிறுவனங்களும் இந்த முறையை கடைபிடிக்க முடிவு செய்துள்ளது. பேஸ்புக், ட்விட்டர்,பேடிஎம் போன்ற நிறுவனங்களும் ஊதியத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
TN Job “FB Group” Join Now
இந்த சம்பள குறைப்பினால் மிச்சமாகும் பணத்தை ஊழியர்களின் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வதற்கும் மற்ற சில முக்கிய பயனுள்ள பணிகளுக்கு செலவிடப்படும் என நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஏற்படும் மாற்றங்களை தங்கியிருக்கும் இடம், தொலைவு ஆகியவற்றை வைத்துக் கணக்கிடுவதற்காக ஆல்பபெட் நிறுவனம் வழிமுறைகளை உருவாகியுள்ளது. மேலும் குறைந்தது 10% வரை சம்பளம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.