IT நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – முடிவுக்கு வரும் வீட்டிலிருந்து வேலை? எதிர்கால திட்டம் இதுதான்!
இந்தியாவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து வேலை முறையை முடித்து விட்டு மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வரும் நிலையில், இந்த நிறுவனங்களின் எதிர்கால திட்டம் குறித்த சில தகவல்களை இப்பதிவில் காணலாம்.
IT ஊழியர்கள்:
உலகெங்கிலும் உள்ள பல தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள், எதிர்காலத்தில் தனது ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியைத் தொடருவது குறித்து திட்டமிட்டு வருகின்றன. அதாவது, கடந்த ஆண்டு கொரோனா பேரலை தொற்று தாக்கத்திற்கு மத்தியில் ஊழியர்களை வீடுகளில் இருந்து வேலை செய்ய அனுமதித்த IT நிறுவனங்கள் இந்த முறையை புதிய வேலை கொள்கையுடன் தொடர முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஹைபிரிட் என்ற புதிய வேலை மாடலைத் தொடர IT நிறுவனங்கள் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
கொரோனா போன்ற பேரழிவு நேரத்தில் அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்வதை கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் சாத்தியமாக்கியுள்ளன. இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் மாதிரியானது, பணியாளர்கள் மீதான லாக்டவுன்களின் தாக்கத்தை குறைக்க முயல்கிறது. இதற்கிடையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளது. இப்போது கொரோனா இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கும்.
இந்த ஹைப்ரிட் மாடல், பணியாளர் அட்டவணையில் அலுவலகம் மற்றும் தொலைதூர பணி வசதியை வழங்குகிறது. அதாவது, இந்த முறையானது தொலைதூரத்தில் இருந்து வேலை செய்வது அல்லது அலுவலகத்திற்கு செல்வது என 2 விருப்பங்களை கொடுக்கிறது. இது குறித்து அமெரிக்கா முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 90 சதவீத மூத்த நிர்வாகிகள் வீட்டில் இருந்தே வேலை செய்ய எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர். இந்த காரணத்திற்காக, 76 சதவீத அமெரிக்க நிறுவனங்கள் நகரம் அல்லது மாநிலத்திற்கு வெளியே பணியாளர்களை நியமிக்க முயற்சிக்கின்றன.
ஏனென்றால் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை வசதியாக உணர்கிறார்கள். இது குறித்த ஒரு கணக்கெடுப்பின்படி, வீட்டிலிருந்து பணிபுரியும் அல்லது தொலைதூர பணியாளர்களில் 66 சதவீதம் பேர் ஆன்-சைட்டை விட வீட்டிலேயே அதிக உற்பத்தியை வழங்குவதாக கூறுகிறார்கள். ஏறக்குறைய 75 சதவீத பங்கேற்பாளர்கள் வீட்டிலோ அல்லது வேறு இடங்களிலோ வேலை செய்யும் வசதி இருந்தால் தங்கள் வாழ்க்கை எளிதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். மேலும், 68% வணிக நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதில் பணியாளர்களின் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றன.
இப்போது ப்ரோடோஸ்கோரின் ஆய்வு, பொதுவாக அலுவலகச் சூழல் காரணமாக பெரும்பாலான பணியாளர்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்று கூறுகிறது. அதுவே வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 10 நிமிடங்களுக்கும் குறைவாகவே சோம்பேறித்தனமாக செலவிடுகிறார்கள். வாரத்தில் ஒரு நாளுக்கு மேல் வேலை செய்கிறார்கள். அதுவும் 47% அதிக உற்பத்தித்திறனுடன் வேலை செய்கிறார்கள். மேலும் ஆபிசில் வரும் ஃபோன் அழைப்புகள், கிசுகிசுக்கள் இல்லாமல் ஊழியர்கள் வீட்டில் இருக்கும் போது முழு கவனத்துடன் பணியில் இருப்பார்கள் என கூறுகிறது.
அதனால் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ் மற்றும் எச்சிஎல் டெக் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஐடி நிறுவனங்கள் நீண்ட கால ஹைப்ரிட் மாடல் வேலைகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. அந்த வகையில் வாடிக்கையாளர்கள், கட்டுப்பாட்டு சூழல் மற்றும் பல காரணிகளைக் கருத்தில் கொண்டு, ஹைப்ரிட் மாடலை அறிமுகப்படுத்த உள்ளதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. TCS நிறுவனமும் ஆன்-சைட் மற்றும் ஆன்லைன் போன்ற பல்வேறு வேலை முறைகளையும் திட்டமிட்டுள்ளது. மேலும் எதிர்காலத்திற்கு ஏற்ற, 25X25 மாடலை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.