TCS, Infosys, HCL நிறுவன ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – Work From Home முடிவு!
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தினால் TCS, Infosys, HCL நிறுவன ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. இன்னும் ஓரிரு மாதத்திற்குள் அடுத்தகட்ட ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்க இருக்கின்றனர்.
Work From Home அறிவிப்பு
கொரோனா பரவளின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுமே TCS, Infosys, HCL முதலிய IT நிறுவன ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து தான் வேலை பார்த்து வந்தனர். தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பழையபடி ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கொரோனா காலக்கட்டத்தில் புதிதாக எந்த ஊழியர்களையும் பணியமர்த்தவில்லை. அதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே இந்த IT நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியடைந்து விட்டது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தற்போதைக்கு மூத்த ஊழியர்கள் மட்டும் அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். அதாவது 5% ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். மீதமுள்ள 95% ஊழியர்கள் அடுத்தகட்டத்தில் அலுவலகங்களுக்கு செல்லவுள்ளனர். மேலும், TCS, இன்ஃபோசிஸ் மற்றும் HCL போன்ற நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடலைத் தொடர முடிவு செய்துள்ளனர். இந்த ஐடி நிறுவனங்கள் 25X25 மாடலை வெளியிட இருப்பதாகவும், ஊழியர்களுக்காக இயக்க மண்டலங்கள் (OOZ) மற்றும் ஹாட் டெஸ்க்குகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த ஹைப்ரிட் வேலை மாதிரி வேலை திட்டத்திற்கு அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய 25 சதவீத ஊழியர்களுக்கு மேல் தேவைப்படாது. மேலும், அலுவலகத்தில் 25 சதவீதத்திற்கு மேல் நேரத்தை செலவிட வேண்டியதில்லை எனவும் IT நிறுவனங்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், இந்தாண்டு பாதியில் 50% ஊழியர்கள் வரைக்கும் அலுவலகங்களுக்கு அழைக்க TCS, Infosys, HCL நிறுவனங்கள் திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் அழைத்து ஊழியர்களும் அலுவலகங்களுக்கு தான் செல்ல இருக்கின்றனர்.