TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2022 இறுதி வரை Work From Home நீட்டிப்பு!
கொரோனா காலகட்டத்தின் போது அனைத்து ஐடி நிறுவன ஊழியர்களும் வீட்டில் இருந்தே தான் வேலை பார்த்து வந்தனர். தற்போது இந்தாண்டு முழுவதும் Work From Home நீடிக்கபட வாய்ப்புள்ளதாக HCL நிறுவனம் அறிவித்துள்ளது.
Work From Home:
கொரோனா காலகட்டத்தின் போது கடந்த இரண்டு ஆண்டுகளுமே தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து தான் வேலை பார்த்து வந்தனர். ஆரம்பத்தில் வீட்டில் இருந்து வேலை செய்ய நிறுவன ஊழியர்கள் மிகவும் தயங்கினர். பின்பு, வீட்டிலேயே வேலை பார்க்க சௌகரியமாக இருப்பதால் Work From Home முறை தான் சிறந்தது என எண்ணி கொண்டிருக்கின்றனர். மேலும், கொரோனா பரவல் குறைந்ததும் அனைத்து ஐடி நிறுவன ஊழியர்களில் இருந்து மூத்த ஊழியர்களை மட்டும் அலுவலகங்களுக்கு அழைத்துள்ளனர்.
சென்னையில் மீண்டும் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
டாடா கன்சல்டன்சி சர்வீஸ், HCL மற்றும் இன்போசிஸ் போன்ற ஐடி நிறுவன ஊழியர்களில் 5% ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். அடுத்தடுத்து ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் சில ஐடி நிறுவனங்களில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் அலுவலகங்களுக்கு செல்லும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கால கட்டத்திற்கு பிறகு பல ஐடி நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியடைந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால் பல ஊழியர்களை பணியில் அமர்த்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு பாதியில் 20% ஊழியர்களை அலுவலங்களுக்கு அழைக்க HCL நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 80% ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே தான் வேலை பார்க்கவுள்ளனர். மேலும், இந்தாண்டு இறுதி வரைக்கும் கூட Work From Home முறை நீடிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என HCL நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Work From Home நீடிக்கப்பட்டு வருவதால் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.