பெண் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பை அளித்த Airtel – வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம்!
ஏர்டெல் நிறுவனம் நாட்டில் 12 நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 5ஜி சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதனால் தற்போது இந்நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.
வேலைவாய்ப்பு:
நாட்டில் தற்போது ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை 12 நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் தனது 5ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் 5ஜி சேவையை விரிவுபடுத்த திறமையான மற்றும் நிலைத்தன்மையுடன் கூடிய பணியாளர்களை பணி நியமனம் செய்ய உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பணியாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு சலுகைகளை வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறியிருப்பதாவது, பணியாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே வேலை பார்க்கக் கூடிய சூழல் உருவாக்கி தருவது மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது ஆகிய சலுகைகளை Airtel நிறுவனம் வழங்க உள்ளதாக கூறியுள்ளார்.
நிப்டி புள்ளிகள் உயர்வு – இன்றைய தேசிய பங்கு சந்தை நிலவரம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
Exams Daily Mobile App Download
இந்த வேலைவாய்ப்பில் கீழ் அதிகமாக பெண் பொறியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். அதாவது அவர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பதற்கு தேவையான வசதிகளை செய்து தர இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.