வீட்டில் இருந்தே வேலை (WFH) ஜனவரி 2022 வரை நீட்டிப்பு – கூகுள் நிறுவனம் அறிவிப்பு!
கொரோனா தாக்கத்தின் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வீட்டில் இருந்து பணிபுரிய முன்னணி நிறுவனங்கள் அனுமதி அளித்தன. இது குறித்து கூகிள் நிறுவன CEO சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார்.
கூகுள் WFH:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்த உலக சுகாதார மையம் அறிவுரை வழங்கியது. அதனை தொடர்ந்து நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக பல்வேறு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு முன்னணி மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
வார இறுதி முழு ஊரடங்கு நீக்கம், இரவு ஊரடங்கில் தளர்வு – நாளை முதல் அமல்!
அதன் பின் முதல் அலையை தொடர்ந்து இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடியதனால் ஊழியர்களுக்கு ஒர்க் பிரம் ஹோம் தொடரப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஐ.டி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகம் வர கூறியுள்ள நிலையில் கூகுள் நிறுவனம் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை வழங்கி வருகிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
‘‘ஏராளமான உலகளாவிய நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நாங்கள் எங்களுடைய 10 ஆயிரம் ஊழியர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வரவேற்க இருக்கிறோம் என்பதை கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் எதிர்பார்த்ததை விட இதற்கான ஏற்பாடுகள் சற்று தொலைவில் உள்ளன. இருந்தாலும் அதற்காக நாங்கள் ஒன்றிணைவோம்’’ என அவர் கூறியுள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10-ந் தேதி வரை ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் அழைக்கப்படுவதற்கு முன் ஒரு மாதம் வரை கால அவகாசம் கொடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.