ஊழியர்களுக்கு ஆப்பு வைக்கும் TCS.. Work from home பணியாளர்கள் இனி ‘இதை’ கட்டாயம் செய்ய வேண்டும்!
டிசிஎஸ் நிறுவனம், தனது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியை தொடர விரும்பினால், இதற்காக மருத்துவச் சான்றிதழ்களை இனி சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
Work from home:
அனைத்து ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு கொரோனா காலத்தில் அளித்து வந்த வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான நடைமுறைகளை தற்போது திரும்ப பெற்றுள்ளது. ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில், நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தொழிலாளர்கள் மருத்துவ காரணங்களுக்காக வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்பினால், ஊழியர்களின் மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க அந்நிறுவனம் வலியுறுத்துகிறது.
டிசிஎஸ் மருத்துவ குழுவினால் மருத்துவச் சான்றிதழ்கள் சோதிக்கப்பட்டு வருகிறது. ஊழியர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், முன்னதாக டிசிஎஸ் வெளியிட்ட அறிக்கையின் படி, வாரத்தில் 3 நாட்கள் அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வருவது கண்காணிக்கப்படுகிறது.
Mobile Banking செய்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி செலவே இல்ல! வந்தது புதிய மாற்றம்!
Exams Daily Mobile App Download
டிசிஎஸ் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்காட் அவர்கள் சமீபத்திய செய்தி குறிப்பில், தங்களது நிறுவனத்தின் 6,16,171 தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் அலுவலகத்தில் வந்து பணியாற்ற தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே மூன் லைட்டிங் முறை ஐடி துறையில் பேசுபொருளாக இருக்கும் நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த செயல்முறை அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்