தமிழக கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி – 600 கோடி ஒதுக்கீடு!
தமிழக கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கப்பட்ட கடனை தள்ளுபடி செய்வதற்கு அரசு 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. கடனை தள்ளுபடி செய்வதற்கு கூட்டுறவு வங்கிகள் உறுதிமொழி பெறுகிறது.
கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகைக்கடன் மகளிர் சுய உதவிக்குழுவினர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி இவர் ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான பணியை அரசு மேற்கொண்டது. கடன் பெற்றவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் மொத்த கடன் பெற்ற 48,84 ,726 பேரில் 35,37,693 பேர் நகைக்கடன் பெற தகுதியற்றோர் பட்டியலில் உள்ளனர். இதனால் நகைக்கடன் பெற்றவர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தது. இதனையடுத்து தகுதியானோருக்கு 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது கூட்டுறவு வங்கிகளில் .மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டு, 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
TET தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? – உங்களுக்கான அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கப்பட்ட கடனை தள்ளுபடி செய்வதற்கு கூட்டுறவு வங்கிகள் உறுதிமொழி பெறுகிறது. கடன் விபரம், உறுப்பினர்களின் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல் பெறப்பட்டிருக்கிறது. பயிர் கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால், அவர்களுக்கு மகளிர் குழு கடன் தள்ளுபடி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு தணிக்கை துறையினர் ஆய்வுக்கு பின், மகளிர் குழு உறுப்பினர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.