LICயில் பெண்களுக்கான ஆதார் ஷீலா திட்டம் – முழு விவரம் இதோ!
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) நிறுவனமானது தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் பெண்களுக்கான எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
LIC திட்டம்:
இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் லட்சக்கணக்கில் பாலிசிதாரர்கள் இருக்கின்றனர். அவர்கள் பயன்பெறும் வகையில் பல நலத்திட்டங்களை அந்த நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதில் பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் பல பயன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இணைக்கப்படாத, கூட்டாண்மை, தனிநபர், ஆயுள் உத்தரவாதத் திட்டம் உள்ளிட்ட பயன்களை இத்திட்டம் வழங்கி வருகிறது.
பெண்களின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் சேமிப்புக்கான பாலிசி தான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். மேலும் இந்த திட்டம் மூலமாக பாலிசி முடிவதற்கு முன்னதாக பாலிசிதாரருக்கு மரணம் ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு முழு நிதியுதவி அளிக்கப்படுகிறது. எல்ஐசி ஆதார் ஷீலா திட்டத்தில் 30 வயதில் திட்டத்தைத் தொடங்கினால் ஒரு நாளைக்கு ரூ. 58 சேமிப்பது என்றால் ஒரு வருடத்தில் ரூ.21,918 தொகை செலுத்த வேண்டும். அது 20 ஆண்டுகளில் ரூ. 4,29,392 செலுத்த வேண்டி வரும். மேலும் பாலிசி முதிர்ச்சி அடையும் போது ரூ.7,94,000 கிடைக்கும்
மேலும் பெண்கள் இந்த பாலிசியை தொடங்க எந்தவித மருத்துவ பரிசோதனையும் தேவை இல்லை. மேலும் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ 75,000 எனவும், அதிகபட்சம் ரூ. 3,00,000 செலுத்தலாம். இந்த திட்டத்தில் சேர பெண்களுக்கு குறைந்தபட்சம் 8 வயது நிறைவடைய வேண்டும். மேலும் அதிகபட்ச வயது வரம்பு 55 ஆண்டுகள் ஆகும். பாலிசி முதிர்ச்சியின் அதிகபட்ச வயது 70 ஆண்டுகள் ஆகும்.