ஆப்கனில் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது – தாலிபான்கள் உத்தரவால் பதற்றம்!
ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகால போருக்கு பின்னர் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது பெண்கள் வேலைக்கு செல்ல கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இது அந்நாட்டு பெண்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஆப்கன் தாலிபான்கள்:
ஆப்கானிஸ்தான் அரசியலில் பதற்றம் நிலவி உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிய பின் அங்கிருக்கும் பெரும்பாலான மாகாணங்களை தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அமீரகத்துக்கு தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இதனால் போர்க்களமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
‘தவறு இருந்தால் மன்னியுங்கள்’ – தி பேமிலி மேன் வெப்சீரிஸ் நடிகை சமந்தா பேட்டி!
ஆப்கானிஸ்தானில் பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து தற்போது பெண்கள் வேலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த 1996 முதல் 2001 வரையிலான தாலிபான்கள் ஆட்சியில், அலுவலகத்திற்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் வீட்டில் இருந்து வெளியே வரும்போது ஆண்களின் துணையோடு தான் வர வேண்டும், முழு உடலையும் மறைக்கும் விதமாக ஆடைகளை அணிய வேண்டும் என ஆப்கானிஸ்தானில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
TN Job “FB Group” Join Now
தாலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு எப்போதும் கேள்விக்குறியாக இருக்கும். இதை ஒப்புக் கொள்ளும் வகையில் பெண்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறியுள்ளார். “பாதுகாப்பு காரணங்களால் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது. தாலிபான்கள் மாறிவருகின்றனர். இருப்பினும், தாலிபான்களுக்கு இதில் போதுமான அனுபவங்கள் இல்லை” என தெரிவித்து உள்ளார்.