தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் இந்தாண்டே அனுமதி – நீதிமன்றம் உத்தரவு!
இந்தியாவில் தேசிய பாதுகாப்பு பிரிவில் இந்த ஆண்டு முதல் பெண்களை சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு:
இந்தியாவில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. பெண்களும் நாங்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் இல்லை என்று ஒவ்வொரு முறையும் உறுதிபடுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு அகாடமி அமைப்பான என்டிஏவில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திருமணம் ஆகாத ஆண்கள் மட்டுமே சேர்ந்து பயிற்சி பெற வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்கை முடிவு என்று மத்திய அரசு தெரிவித்தது.
கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – இங்கிலாந்து அங்கீகாரம்!
இந்த என்டிஏ நுழைவுத்தேர்வில் பெண்கள் கலந்து கொள்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து குஷ் கால்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். என்டிஏ நுழைவுத்தேர்வில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது பாலின பாகுபாட்டை காட்டுகிறது என்று மனுவில் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி என்டிஏ நுழைவுத் தேர்வை பெண்களும் எழுத அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
SBI வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ஓய்வூதியர்களின் ஆன்லைன் சேவைகள் புதுப்பிப்பு!
இதனை ஏற்று மத்திய அரசு தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு செய்துள்ளது. ஆனால் நடப்பு ஆண்டு முதல் என்டிஏ நுழைவுத் தேர்வில் பெண்களை அனுமதிப்பது என்பது சற்று கடினம் புதிய விதிமுறைகளை உருவாக்க கால அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. 2022 முதல் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறும் என்டிஏ தேர்வில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.