டிச.12ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – ஆட்சியர் விடுத்துள்ள வேண்டுகோள்!!
மாநிலத்தில் பைக் டாக்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஆட்டோ தொழிசங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தற்போது மாவட்ட ஆட்சியர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பைக் டாக்சி:
தற்போது கார் மற்றும் ஆட்டோ டாக்சி போன்று பைக் டாக்சியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பை கிடைத்திருந்தாலும் ஆட்டோ டாக்சி தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் பைக் டாக்சிகளில் வெள்ளை நிற பதிவு எண்ணுடன் ஓட்டப்படுவதால், அரசுக்கு வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஆட்டோ, வாடகை கார்கள் மஞ்சள் நிற வாகன பதிவு எண்ணுடன் இயக்கப்படுவதால் ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் அரசுக்கு வரி செலுத்த வேண்டும்.
Exams Daily Mobile App Download
அத்துடன் 2 ஆண்டுக்கு ஒரு முறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று வாகனங்களை புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும் பைக் டாக்சிகளில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25 மட்டுமே வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் ஆட்டோ டாக்சிகளை நாடுவதில்லை. அதனால் புனேவில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் பைக் டாக்சிகளுக்கு தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
EPFO பயனர்கள் கவனத்திற்கு.. அதிகரிக்கும் ஓய்வூதியம் – வெளியான சூப்பர் தகவல்!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த நிலையில் பைக் டாக்சிகளுக்கு எதிராக புனேவில் டிசம்பர் 12ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக ஆட்டோ தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக புனே மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் டிசம்பர் 12ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் பைக் டாக்சிகளுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.