Wipro IT நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – செப்டம்பர் முதல் அலுவலகம் திறக்கப்பட வாய்ப்பு!
இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் முதல் விப்ரோ நிறுவனத்தில் ஊழியர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வாய்ப்புள்ளது என அந்நிறுவனத்தின் தலைமை மனித வள அலுவலர் சவுரப் கோவில் தெரிவித்துள்ளார்.
மீண்டும் அலுவலகத்தில் பணி:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பேரதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அரசுகள் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் உள்ளது. ஆனாலும் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் ஆழ்ந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசுகள் முழு ஊரடங்கை பிறப்பித்தது. அதனால் அனைத்து பகுதிகளிலும் கடைகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் இயங்க அரசு தடை விதித்தது.
SBI வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? ஆதார் – பான் இணைப்பு அவசியம்!
மேலும் மாநிலங்கள் தோறும் கொரோனா தடுப்பு மையங்கள் அமைத்து நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து கள பணியாளர்கள் பகுதிகள் தோறும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி வழங்கியது. அதன்படி நிறுவனத்தின் ஊழியர்கள் தொலைபேசி, மடிக்கணினி, கணினி போன்றவற்றை பயன்படுத்தி வீட்டிலிருந்து இணையதள சேவை மூலம் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது !!!
இதன் காரணமாக தொற்று பரவலும் சற்று குறைந்து வருகிறது. அதனால் மாநில அரசுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து உள்ளன. அதன் ஒரு பகுதியாக 50 % ஊழியர்களுடன் அலுவலகங்களை திறந்து பணியை தொடரலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் விப்ரோ நிறுவனத்தில் ஊழியர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வாய்ப்புள்ளது என அந்நிறுவனத்தின் தலைமை மனித வள அலுவலர் சவுரப் கோவில் தெரிவித்துள்ளார். மேலும் விப்ரோ நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த ஜூலை 14ம் தேதி தேதி நடைபெற்றது. அப்போது பேசிய ரிஷாத் பிரேம்ஜி 55 சதவீத ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.