Wipro நிறுவனத்தில் ஜூன் வரை 12,000 புதிய ஊழியர்கள் பணியமர்த்தல் – வெளியான தகவல்!

0
Wipro நிறுவனத்தில் ஜூன் வரை 12,000 புதிய ஊழியர்கள் பணியமர்த்தல் - வெளியான தகவல்!
Wipro நிறுவனத்தில் ஜூன் வரை 12,000 புதிய ஊழியர்கள் பணியமர்த்தல் - வெளியான தகவல்!
Wipro நிறுவனத்தில் ஜூன் வரை 12,000 புதிய ஊழியர்கள் பணியமர்த்தல் – வெளியான தகவல்!

கொரோனா பொது முடக்கத்துக்கு மத்தியிலும் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவில் இதுவரை இல்லாத அளவுக்கு 12,000 புதிய ஊழியர்களை பணியமர்த்தியதாக கடந்த ஜூன் மாத காலாண்டு முடிவில் தகவல் தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் பணியமர்த்தல்

இந்தியாவை தலைமையிடமாக கொண்ட முன்னணி தொழில்நுட்ப வழங்குனரான விப்ரோ நிறுவனம் நடந்து முடிந்துள்ள ஜூன் காலாண்டுக்கான முடிவை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவுக்கு ஜூன் மாத காலாண்டு வரை 12,000 புதிய ஊழியர்களை பணியமர்த்தியதாக இந்நிறுவனத்தின் CEO தியரி டெலாபோர்டே தெரிவித்துள்ளார். இருப்பினும் கடந்த மார்ச் மாத காலாண்டில் மட்டும் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றி வந்த 12% பேரும், ஜூன் காலாண்டில் 15.5% பணியாளர்களும் வெளியேறியுள்ளனர்.

அம்ரிதா வீட்டிற்கு செல்லும் எழில், சமையல் ஆர்டரில் பிசியான பாக்கியா – இன்றைய எபிசோட்!

இதற்கிடையிலும் புதிதாக 12 ஆயிரம் பேரை பணியமர்த்தி இந்நிறுவனம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் திறமையான ஊழியர்களை பணியமர்த்துவதில் ஏற்பட்ட போட்டி காரணமாக, விப்ரோ நிறுவனத்தில் ஊழியர்களை வெளியேற்றும் விகிதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் ஜூன் மாத காலாண்டு வரை இந்நிறுவனத்தில் 2.09 லட்சம் ஊழியர்கள் பணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று காலத்திலும் விப்ரோ நிறுவனம் சுமார் 15,000 புதிய ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

இதில் 12,000 பேர் கடந்த 3 மாதத்தில் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். TCS நிறுவனத்தை பொருத்தளவு, கடந்த ஜூன் மாத காலாண்டு வரை 20,409 புதிய ஊழியர்களை பணியமர்த்தியதன் மூலமாக அதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர வரும் 2022 ஆம் நிதியாண்டிலும் 40,000 புதிய ஊழியர்களை பணியில் அமர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா பேரிடர் காலத்திலும் ஏப்ரல் மாதத்தில் TCS நிறுவனமும், ஜூலை மாதத்தில் இன்போசிஸ் நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அளித்தது. அந்த வரிசையில் விப்ரோ நிறுவனம் வரும் செப்டம்பர் மாதத்தில் 80% ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அளிக்க உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!