ராஜஸ்தானில் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ஜனவரி 14ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு!!
ராஜஸ்தானில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக பள்ளிகளுக்கு ஜனவரி 7ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த விடுமுறை மேலும் நீட்டிப்பு செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பள்ளி விடுமுறை
நாட்டில் பனிக்காலம் தொடங்கியதால் பல்வேறு நகரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதில் குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நகரில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அந்த வகையில், ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 7ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானின் சில பகுதிகளில் கடுமையான மூடுபனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் -ரூ. 109 கோடி நிதி வெளியீடு!
அத்துடன் மேலும் சில நாட்களுக்கு டெல்லி NCR Region, உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களுக்கு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி ஜெய்ப்பூர் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 14ம் தேதி வரை விடுமுறை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளிகள் ஜனவரி 16ம் தேதி அன்று மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.