பெத்த அம்மாவையே கொல்ல திட்டமிடும் வெண்பா, திருமணத்தில் இருந்து தப்பிப்பாரா? “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பாவை போலீசார் கைது செய்து சென்றுவிட ஷர்மிளா வந்து வெண்பாவை பார்க்கிறார். என்னை எப்படியாவது வெளியே கொண்டு போங்க என வெண்பா அழ அப்போ நான் காட்டும் மாப்பிள்ளையை நீ திருமணம் செய்ய வேண்டும் என ஷர்மிளா சொல்கிறார். அதனால் வெண்பா ஷர்மிளாவை கொல்ல போகிறாரா என்பதை எல்லாம் அடுத்து வர போகும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் புது கதாபாத்திரங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் இனி ஒரே இடத்தில் வேலை செய்ய போகிறார்கள். அதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாக இருக்கிறது. மறுபக்கம் வெண்பாவின் அம்மா ஷர்மிளா வெண்பாவிற்கு எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கிறார். ஆனால் வெண்பா பாரதியை தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருக்கிறார்.
ExamsDaily Mobile App Download
விக்ரமின் புதிய மருத்துவமனையில் வெண்பாவை போலீசார் கைது செய்துவிடுகின்றனர். அப்போது காரணம் கேட்க நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து கொள்ளாமல் இருப்பதால் தான் கைது செய்யப்பட்டார் என சொல்கிறார். ஷர்மிளா வெண்பாவை திட்ட வெண்பா போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்படுகிறார். அப்போது வெண்பாவை ஷர்மிளா பார்க்க வருகிறார். என்னை எப்படியாவது வெளியே கூட்டிக் கொண்டு போ இந்த கேஸில் இருந்து வெளியே கொண்டு வா என வெண்பா கெஞ்சுகிறார்.
கார் விபத்தில் சிக்கிக் கொண்ட ‘பாக்கியலட்சுமி’ ஜெனி – அவரே வெளியிட்ட பதிவு! நடந்தது என்ன?
நான் எல்லாம் செய்கிறேன் ஆனால் நீ நான் பார்த்த பையனை திருமணம் செய்ய வேண்டும் என ஷர்மிளா உறுதியாக சொல்கிறார். அதனால் வெண்பாவிற்கு என்ன பேசுவது என தெரியாமல் இருக்கிறது. ஏற்கனவே பாரதியிடம் வெண்பா சொன்ன பொய் எல்லாம் தெரிந்த சித்தப்பாவை வெண்பா கொன்றுவிட்டார். தற்போது தடையாக இருக்கும் அம்மாவை அவர் கொல்வாரா என்பதே அடுத்து வர போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது.