தமிழகத்தில் தேநீர், சலூன் கடைகள் திறக்க அனுமதி? தொழிலாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், நாளை முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நடைமுறைபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதில் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கிய நிலையில் தேநீர் மற்றும் சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடைகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. மே 24 முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, அனைத்து கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்துள்ளது. இருந்த போதிலும் நோய்த்தொற்று குறையாத காரணத்தினால் ஜூன் 14 வரை ஊரடங்கு நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த தளர்வுகள் நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது. அதில் மளிகை, காய்கறி கடைகள், பழக்கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடைபாதை கடைகள் மற்றும் ஹார்டுவேர், மிதிவண்டி, இருசக்கர வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பழுது பார்க்கும் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேநீர், சலூன் கடைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தமிழக அரசின் இ-பதிவில் புதிய வசதி அறிமுகம் – இன்று முதல் அமல்!!
எனவே மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தேநீர் கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தரப்பில் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளது. மேலும் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.