மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் மீண்டும் அகவிலைப்படி உயர்வு? இன்று வெளியாகும் முடிவு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்கும் AICPI குறியீடு இன்று (ஏப்ரல்.30) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதை வைத்து தான் அடுத்த அகவிலைப்படி உயர்வு முடிவு செய்யப்பட இருக்கிறது.
அகவிலைப்படி உயர்வு
சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசாங்கம் 34 சதவீதமாக உயர்த்தியது. இந்த உயர்த்தப்பட்ட டிஏ தொகை மற்றும் மூன்று மாத நிலுவைத் தொகை ஏப்ரல் மாத சம்பளத்தில் வழங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் வரும் ஜூலை 2022ம் ஆண்டிற்கான அகவிலைப்படி (DA) தொகை மீண்டும் திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தப்படும் DA உயர்வு இந்த முறையும் இருக்கும் என அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
ஆனால் இந்த ஆண்டில் ஜூலை மாதத்திற்கான DA உயர்வு கிடைப்பதில் சில சிக்கல்கள் எழுந்திருக்கிறது. ஏனென்றால் ஜனவரி-பிப்ரவரி வரையுள்ள முதல் இரண்டு மாதங்களில், அகவிலைப்படியின் போக்கு எதிர்மறையாக இருந்தது. இப்போது மார்ச் மாதத்திற்கான தரவுக்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை இன்று அதாவது ஏப்ரல் 30ம் தேதி வெளியிடப்படும். இந்த தரவுகளை வைத்து தான் DA நிர்ணயிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் டிஏ உயர்வு தற்போதைய போக்கை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
27 லட்சம் ஊதியத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – 170+ காலிப்பணியிடங்கள்..!
இப்போது 7வது ஊதியக் குழுவின் படி, மத்திய அரசு ஊழியர்களின் DA ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 3 தவணைக்கான அகவிலைப்படி உயர்வு மொத்தமாக சேர்த்து 34 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏஐசிபிஐ புள்ளிகள் 125.4 ஆக இருந்தது. இது ஜனவரி 2022ல் 0.3 புள்ளிகள் சரிந்து 125.1 ஆக குறைந்தது. பிப்ரவரியில் அது மேலும் சரிந்து 125 ஆக குறைந்தது. இந்த வீழ்ச்சியின் காரணமாக, ஜூலை மாதத்தில் அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.
இப்போது மார்ச் மாத புள்ளிவிவரம் இதற்குக் கீழே குறைந்தால், டிஏ உயரும் வாய்ப்புகள் குறைவு. அதாவது, AICPI குறியீடு 124க்கு கீழே சென்றால் DA நிலையாக இருக்கலாம். தற்போது நுகர்வோர் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அதே போல தொழில்துறை தொழிலாளர்கள் மட்டத்தில், இந்த எண்ணிக்கை தற்போதைய விகிதத்தை விட சிறப்பாக உள்ளது என்பதால் DA உயர்வு கிடைக்கலாம் என சில கணிப்புகள் எழுந்திருக்கிறது. அந்த வகையில் AICPI குறியீடு நான்கு மாதங்களுக்கு மேம்பட்டால், ஊழியர்களுக்கு அகவிலைப்படி பற்றிய நல்ல செய்தி கிடைக்கும்.