அதிரடியாக உயரவிருக்கும் தங்கத்தின் விலை? இறக்குமதி வரியை 15% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு!
தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கான வரியை 10.75 சதவீதத்தில் இருந்து 15% ஆக உயர்த்தி மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதன் விளைவாக ஆபரணதங்கத்தின் விற்பனை விலையில் அதிக உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
வரி உயர்வு:
சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற GST கவுன்சில் கூட்டத்தில் அரிசி, கோதுமை துவக்கி பல்வேறு பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி(GST) உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த வரிசையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கான வரியை 10.75 சதவீதத்தில் இருந்து 15% ஆக உயர்த்தி மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, தங்கத்தின் மீதான இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக தங்கத்தின் அடிப்படை சுங்க வரி 7.5% ஆக இருந்தது.
Exams Daily Mobile App Download
இப்போது, இந்த சுங்க வரி விகிதத்தையும் சேர்த்து வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி 2.5% இணைக்கப்பட்டுள்ளதால் இத்தொகை மொத்தமாக 15% என்ற அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சமீப காலமாக இந்தியாவில் தங்க இறக்குமதியானது அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகிறது. குறிப்பாக, கடந்த மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக புள்ளி விவர தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை 10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை? அரசு விளக்கம்!
அதே போல ஜூன் மாதத்திலும் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதனால் இந்திய சந்தையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்கவும், தங்கம் இறக்குமதியை குறைப்பதற்காகவும் தங்கம் மீதான இறக்குமதி வரியை 15% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்போது தங்கத்திற்கான சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளதால் விற்பனை விலையும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கூடிய விரைவில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,000க்கும் மேல் விற்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.