இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அமலுக்கு வருமா? மத்திய அரசு தீவிரம்!

0
இந்தியாவில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் அமலுக்கு வருமா? மத்திய அரசு தீவிரம்!
இந்தியாவில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் அமலுக்கு வருமா? மத்திய அரசு தீவிரம்!
இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அமலுக்கு வருமா? மத்திய அரசு தீவிரம்!

இந்தியாவில் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப அரசானது பல புதிய நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்றிய அரசு:

தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில சட்டப்பேரவையின் ஐந்து ஆண்டு கால ஆட்சி முடிவடைந்த பிறகோ, அல்லது சில காரணங்களினால் ஆட்சி கலைக்கபட்டாலோ தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த முறையானது நாடாளுமன்றத்திற்கும் பொருந்தும். இதை தற்போது மாற்றியமைத்து அனைத்து மாநில சட்டபேரவைகளுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த பரிசீலனை நடந்துவருகிறது. மாநிலசட்டப்பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தேர்தல் செலவு மிக அதிக அளவில் குறையும் என்று கூறப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் ஒரே சமயத்தில் நடைபெற்றால் மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்த ஒரு மாநில தேர்தலிலும் கவனம் செலுத்த தேவை இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பிரச்சனையில் அரசு முழு கவனம் செலுத்த முடியும் என்றும் கூறுகிறது. அது மட்டுமின்றி ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது வாக்காளர்களை ஊக்குவிக்கும் என்றும் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறுகிறது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பான நடைமுறை சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற குழுவின் அறிக்கையை சட்ட ஆணையத்திற்கு ஒன்றிய அரசு அனுப்பியிருக்கிறது.

SBI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – WhatsApp வங்கி அறிமுகம்!

இது குறித்து சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். நாட்டில் அடிக்கடி தேர்தல் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் பொது தேர்தல் செலவினம் குறையும் என்றும் செலவீனத்தை மத்திய அரசும், மாநில அரசும் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 21வது சட்ட ஆணையம் தனது வரைவு அறிக்கையில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் நிலவும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!