தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்? முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட எந்த ஓய்வு பலன்களையும் பெறவில்லை. இதனால் பழைய ஓய்வூதியத் திட்டம் தான் வேண்டும் என போராடி வந்த நிலையில் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவதற்கான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்
தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என பல பாதகமான அம்சங்கள் இடம் பெற்றதால் மக்கள் பலரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம்? அனுமதி அளிக்குமா அரசு!
மேலும் சுமார் 20 ஆண்டுகளாகவே அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர். புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட 6 லட்சம் ஊழியர்கள் சுமார் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிபிஎஸ் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டன. இதுவரை அரசு ஊழியர்களிடம் இருந்து ரூபாய் 50,000 கோடி வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியத்திட்டம் அறிமுகமான பிறகு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இதனால் ஊழியர்கள் கண்டிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டம் தான் வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேலாகியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த படவில்லை என மக்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் விவகாரம் பரிசீலனையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.