அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட நன்மைகள் – மீண்டும் அமலாகுமா?
தமிழக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும் என தொடர்ந்து போராடுவதற்கு என்ன காரணம்? அப்படி என்னென்ன பலன்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும்? என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் :
தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் பயனடையும் வகையில் தமிழக அரசு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி வந்தது. இந்த பழைய ஓய்வூதிய திட்டம் 2003ஆம் ஆண்டு வரை அமலில் இருந்து அதன் மூலம் பயனடைந்தோர் அநேகர். முக்கியமாக பணி ஊழியர்கள் மறைவுக்குப் பின்னும் அவர்களது துணையாளரான மனைவிக்கும் தொடர்ந்து அளிக்கப்பட்டது. இத்திட்டத்தில் சில நிதி சிக்கல் காரணத்தினால் புதிதாக பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த புதிய திட்டத்தில் பெரும் விருப்பம் காட்டாத ஊழியர்கள் கடந்த 17 வருடமாக எதிர்த்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடுவதற்கு என்ன காரணம்? அப்படி என்னென்ன பலன்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும்?
என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் விஜயபாலனிடம் பேசினோம்.
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சரின் எச்சரிக்கை பதிவு!
அவற்றில் அவர் கூறியதாவது,
1. பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நமது பணத்தில் தேவைப்படும்போது கடனாக பெற்றுக்கொள்ளலாம். அந்தக் கடனுக்கு வட்டி கிடையாது.
2. பணி ஓய்வுபெற்ற பிறகு, நாம் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50% தொகை பென்சனாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்.
3. ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவரது கணவன் அல்லது மனைவிக்கு ஓய்வூதியத்தில் 50% தொகை தொடர்ந்து பென்சனாக வழங்கப்படும்.
4. பழைய ஓய்வூதிய திட்டத்தில் விருப்ப ஓய்வூதியத் திட்டம், இயலாமை ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம், ஈடுகட்டும் ஓய்வூதியம் ஆகியவை கிடைக்கும்.
5. பழைய ஓய்வூதிய திட்டத்தில் வருங்கால வைப்பு நிதி (PF), வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெறும் வசதி, வருங்கால வைப்பு நிதியில் கடன் பெறும் வசதி, பணிக்கால பணிக்கொடை (Gratuity), இறப்பு பணிக்கொடை (Death Gratuity), பணி ஓய்வு பணிக் கொடை (Retirement Gratuity) ஆகியவை கிடைக்கும்.
6. அரசு ஊழியர் பணியின்போது இறந்துவிட்டால் கடைசி ஊதியத்தில் 30% தொகை குடும்ப பென்சனாக கிடைக்கும். 7 ஆண்டுகளுக்கு பின் பணியின்போது இறந்தால் கடைசி ஊதியத்தில் 50% குடும்ப பென்சனாக கிடைக்கும்.
7. அகவிலைப்படி உயர்த்தப்படும்போதெல்லாம் பென்சன் தொகையும் உயரும்.
8. பழைய ஓய்வூதிய திட்டத்தில் மாதாந்திர மருத்துவப் படியாக 300 ரூபாய் கிடைக்கும்.
9. பழைய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப பாதுகாப்பு நிதியாக 50,000 ரூபாய் கிடைக்கும்.
10. 80 வயதுக்கு மேல் உயிருடன் இருப்போருக்கு கூடுதல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் 20% முதல் 100% வரை அதிகமாக கிடைக்கும்.
இவ்வாறு மேற்குறிப்பிட்ட 10 அம்சங்களும் பங்களிப்பு பென்சன் திட்டத்தில் கிடைக்காது. இதனால் தான் தொடர்ந்து அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு மீண்டும் கொண்டுவருமாறு கோரிக்கை வைத்த மயமாக இருக்கின்றனர்.