தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா? முதல்வர் முக்கிய அறிவிப்பு!
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும்படி பல ஆண்டுகளாகவே அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்கனவே பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுமா என முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என சில பாதகமான அம்சங்கள் இடம் பெற்ற காரணத்தினால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வரும்படி அரசு ஊழியர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்தனர். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு பிறகு ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என அரசு ஊழியர்கள் தற்போது வரைக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து சத்தீஸ்கர் அரசுக்கு PFRDA ஒரு கடிதம் அனுப்பியது. அதாவது தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ள பணத்தை வழங்குவதற்கு எந்த ஒரு சட்ட அனுமதியும் கிடையாது என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று சத்தீஸ்கர் அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய நிலையில் தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ள 17 ஆயிரத்து 240 கோடி ரூபாயை வழங்கும்படி PFRDA சத்தீஸ்கர் அரசுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இதை படித்தால் போதும்! ஈஸி டிப்ஸ் இதோ!
இதேபோல ராஜஸ்தான் அரசும் தேசிய பென்சன் திட்டத்தில் உள்ள பணத்தை வழங்குமாறு PFRDA க்கு கடிதம் அனுப்பியுள்ளது. சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக அரசின் சார்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சந்திக்கும் சட்ட சிக்கல்களை பார்த்துவிட்டு முதல்வர் ஸ்டாலின்தான் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.