தமிழகத்தில் பண்டிகை காலங்களில் அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணம் – நடவடிக்கை எடுக்கப்படுமா?

0
தமிழகத்தில் பண்டிகை காலங்களில் அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணம் - நடவடிக்கை எடுக்கப்படுமா?
தமிழகத்தில் பண்டிகை காலங்களில் அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணம் - நடவடிக்கை எடுக்கப்படுமா?
தமிழகத்தில் பண்டிகை காலங்களில் அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணம் – நடவடிக்கை எடுக்கப்படுமா?

தமிழகத்தில் பண்டிகை காலங்களை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணங்களை அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆம்னி பேருந்துகள்;

தமிழகத்தில் அரசு பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இரு பேருந்து சேவைகளிலும் கட்டணங்கள் ஏற்ற, இறக்கமாக நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதால் நேரம் செலவாகுவதை தடுக்க மக்கள் அதிகம் தனியார் பேரூந்துகளையே விரும்புகின்றனர். தனியார் பேருந்துகள் அவர்களாகவே கட்டணங்களை நிர்ணயித்து கொள்வதால் பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்களை அதிகரித்து வசூலித்து வருகின்றது.

இந்த நிலையில் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களை மையமாக கொண்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த நிறுவனங்கள் மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதிக கட்டணங்களை வசூலிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதாவது ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யும் உரிமை மாநில அரசுகளுக்கு இல்லாததால் இத்தகைய ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன. இதையடுத்து தொடர் விடுமுறை தினங்களில் விமான சேவைக்கு இணையாக இந்த நிறுவனங்கள் கட்டணங்கள் வசூலிக்கின்றன.

இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று அச்சம் – புதுவை முதல்வர் முக்கிய தகவல்!

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஏசி வசதி இல்லாத சாதாரண பஸ்களில் இருக்கைக்கு ரூ.1300 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. படுக்கை வசதிக்கு ரூ.2000 வரை கட்டணம் பெறப்படுகிறது. இதுவே சாதாரண நாட்களில் ரூ.800, ரூ.1200 என வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 750 ஆம்னி பேருந்துக்குள் பல்வேறு நகரகங்களுக்கு இயக்கப்படுகிறது. மேலும் இந்த பேருந்துகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும், சிறப்பு ஆய்வாளர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!