கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சூறையாடப்பட்ட பள்ளி மீண்டும் செயல்படுமா? புதிய அறிவிப்பு!

0
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சூறையாடப்பட்ட பள்ளி மீண்டும் செயல்படுமா? புதிய அறிவிப்பு!
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சூறையாடப்பட்ட பள்ளி மீண்டும் செயல்படுமா? புதிய அறிவிப்பு!
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சூறையாடப்பட்ட பள்ளி மீண்டும் செயல்படுமா? புதிய அறிவிப்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கலவரங்களும்,போராட்டங்களும் நடைபெற்ற நிலையில், தற்போது புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி சம்பவம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. மேலும் கடந்த சில நாட்களாக கலவரங்களும் போராட்டங்களும் நடைபெற்றிருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. மாணவி பயின்ற பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. பள்ளி வாகனங்கள்,வகுப்பறைகள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டன.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்,உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு பள்ளியினை சூறையாடினர். பள்ளி கலவரத்தில் மாணவர்களின் சான்றிதழ்கள், பள்ளி வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணுமாறும், வன்முறையின் பின்னணிக்கு யார் காரணம் என்றும் காவல்துறை தங்களது முழு அதிகாரத்தினை பயன்படுத்தி கண்டுபிடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

TNPSC Group 4 தேர்வு மையம் மாற்றம் – ஆட்சியர் திடீர் அறிவிப்பு! கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி!

இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில்
பள்ளியை மீட்கும் நடவடிக்கையாக புதிய ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சூறையாடப்பட்ட பள்ளி மீட்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளர் ஆக ஆத்தூர் கல்வி அலுவலர் ராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!