ஹேமா, லட்சுமியுடன் ஒரே வீட்டில் வாழும் பாரதி & கண்ணம்மா – சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பங்கள்!
பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் இடையில் விவகாரத்து குறித்த காட்சிகள் வர இருப்பதாகவும், அதில் பல முக்கிய மாற்றங்கள் நடக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்ணம்மாவின் முடிவு:
பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது விறுவிறுப்பு கூடியுள்ளது. தொடரில் இருந்து கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்பிரியன் சினிமா வாய்ப்பு காரணமாக விலகி உள்ளார். இதனால் புதிதாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா என்ற மாடல் நடிக்க உள்ளார். இவர் கண்ணம்மா கதாபாத்திரத்தின் உருவ அமைப்புடன் ஒத்துப் போவதால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய கண்ணம்மாவை கதையில் ஒட்ட வைக்கும் விதமாக புதிய விதத்தில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவ.16 வரை கனமழை நீடிக்கும் – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை அறிக்கை!
இதுவரை நடந்து வந்த முக்கிய காட்சிகளை வினுஷாவை வைத்து படமாக்கி ப்ரோமோ வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், பாரதி கண்ணம்மாவிற்கு அனுப்பிய விவாகரத்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சௌந்தர்யா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பாரதி விவாகரத்து குறித்து பிடிவாதமாக இருக்கிறார். கண்ணம்மாவும் எதையும் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் நீதிமன்றத்திற்கு வருகிறார். ஆனால் அங்கு ஹேமாவும் தனது குழந்தை தான் என்பதை சொல்லலாமா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்.
பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2021 – ரூ.20,000/- ஊதியம் | இறுதி வாய்ப்பு..!
இந்நிலையில், தனக்கு லட்சுமி மட்டும், தான் குழந்தை என்றும், தனது குழந்தை அவள் அப்பாவுடன் இருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறுகிறார். இதனால் நீதிமன்றத்தில் நீங்கள் இருவரும் 8 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சிறிது நாட்கள் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது. ஆனால் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பது பற்றிய எதுவும் கூறவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக பாரதி, கண்ணம்மா, லட்சுமி மற்றும் ஹேமா ஆகிய 4 பேரும் ஒன்றாக இருபதற்கன சூழல் வருகிறது. இதனால் அடுத்து வரும் காட்சிகள் குறித்து பொறுத்திருந்து தான் காண வேண்டும்.