ஈஸ்வரி பாட்டிக்காக தனது முடிவை மாற்றி கொள்ளும் பாக்கியா? சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோபி செய்த நம்பிக்கை துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி அலுவலகத்திற்கு செல்கிறார். இந்நிலையில் பாக்கியாவை வீட்டிற்கு வர சொல்லி ஈஸ்வரி கூப்பிட செல்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பான திருப்பங்களுடன் கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. கோபி இத்தனை நாள் பாக்கியாவையும் குடும்பத்தையும் ஏமாற்றிய உண்மை எல்லாம் பாக்கியாவிற்கு தெரிய வந்துள்ளது. அது மட்டுமில்லாமல் கோபி மற்றும் ராதிகாவின் பழக்கத்தை பற்றி கூட பாக்கியாவிற்கு உண்மை எல்லாம் தெரிய வந்துள்ளது. அதனால் பாக்கியா குடும்பத்தில் அனைவரின் முன்னிலையிலும் உண்மை எல்லாம் சொல்லி கோபியிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டார்.
Exams Daily Mobile App Download
அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கோபி வருத்தப்படுகிறார். இதற்கிடையே கோபி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து வாங்கியது தெரிந்து மிகவும் மன வருத்தப்பட்ட பாக்கியா இனிமேல் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என சொல்லி வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார். அவருடைய அந்த முடிவை பார்த்து குடும்பத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அம்மா இல்லாமல் இனியா ஸ்கூலிற்கு போகாமல் அழுது கொண்டே இருக்கிறார்.
பாக்கியாவை வீட்டிற்கு வரும்படி கெஞ்சும் ஈஸ்வரி, தவிப்பில் குடும்பத்தினர் – அதிரடி திருப்பங்கள்!
பாக்கியாவை இனியா நேரில் சென்று கூப்பிட ஆனால் பாக்கியா வரமாட்டேன் என சொல்கிறார். அதனால் கோபியிடம் கோவித்து கொள்கிறார் இனியா. பின் ஈஸ்வரி நான் கூப்பிட்டால் பாக்கியா வருவாள் என சொல்லி பாக்கியாவை சந்திக்க அலுவலகத்திற்கு வருகிறார். பாக்கியாவிடம் கோபி செய்தது தவறு தான் ஆனால் நீ இல்லாமல் எங்களால் வீட்டில் இருக்க முடியவில்லை என கெஞ்சி பேசி பார்க்கிறார். ஈஸ்வரி பாட்டி இவ்வளவு பேசியதை நினைத்து பாக்கியா மனம் மாறுவாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.