மீண்டும் மாநில பட்டியலுக்கு மாறுமா கல்வி? உச்சநீதிமன்றத்தில் மனு.. விசாரணை ஒத்திவைப்பு!

0
மீண்டும் மாநில பட்டியலுக்கு மாறுமா கல்வி? உச்சநீதிமன்றத்தில் மனு.. விசாரணை ஒத்திவைப்பு!
மீண்டும் மாநில பட்டியலுக்கு மாறுமா கல்வி? உச்சநீதிமன்றத்தில் மனு.. விசாரணை ஒத்திவைப்பு!
மீண்டும் மாநில பட்டியலுக்கு மாறுமா கல்வி? உச்சநீதிமன்றத்தில் மனு.. விசாரணை ஒத்திவைப்பு!

இந்தியாவில் மாநில பட்டியலில் இருந்த கல்வி 42 – வது சட்ட திருத்தத்தின் படி பொதுப்பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்வி:

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அது மாநில பட்டியல், மத்திய அரசு பட்டியல், பொது பட்டியல் ஆகியவை ஆகும். அதில் பொது பட்டியல் என்பது மத்திய, மாநில அரசுகளுக்குப் பொதுவான அதிகாரங்களைக் கொண்டதாகும். இதில் கல்வி மாநில பட்டியலிலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 1976 ம் ஆண்டு மத்திய அரசின் நெருக்கடி நிலையின் காரணமாக 42 – வது சட்ட திருத்தத்தின் படி கல்வி, மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

கல்வி பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டதை தமிழகம் உள்பட பல மாநிலங்கள் எதிர்த்து வருகிறது. மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று முழக்கமிட்டனர். இந்த நிலையில் திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனம் வாயிலாக கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மாநில அரசின் சட்டங்கள் மத்திய அரசின் சட்டத்திற்கு கட்டுபட்டவையாக இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த வருட தீபாவளிக்கு போனஸ் கிடைக்குமா? காத்திருக்கும் ஊழியர்கள் – வலுக்கும் கோரிக்கை!

Exams Daily Mobile App Download

இதனால் மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு முன் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வழக்கு ஆவணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் அரசியல் சட்ட பிரச்சனை தொடர்பான இந்த வழக்கின் விசாரணையை 07.11.2022 அன்றுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!