தமிழக ரேஷன் கடைகளில் ‘Wi Fi’ வசதி – விரைவில் அமல்!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொது தரவு மையம் ஏற்படுத்தி, இணையதள சேவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகள்:
ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சமையல் பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாகவே அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசின் பல நலத்திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களிடம் சென்றடைகிறது. ரேஷன் அட்டைகள் மூலமாக மேலே குறிப்பிட்ட பயன்கள் மட்டுமல்லாமல் அது ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகவும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ரேஷன் கடைகளின் தரத்தை உயர்த்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன் படி தமிழகத்தில் செயல்பட்டு வரும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு இணையதள சேவை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரேஷன் கடைகளில் பொது தரவு மையம் ஏற்படுத்தி, இணையதள சேவை வழங்கப்பட உள்ளது. மேலும் ரேஷன் கார்டுதாரர்களின் முகவரிக்கு 2கிமீ தூரத்தில் ரேஷன் கடைகள் அமைந்துள்ளதால் மக்கள் அதற்கு எளிதில் சென்று வருகின்றனர். அதனால் பி.எம்.வாணி திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளை பொது தரவு மையமாக மாற்ற வாய்ப்புள்ளதா என்று ஆராய்ந்து அறிக்கை தருமாறு கடந்த மே மாதம் கூட்டுறவு துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
NLC நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் ரூ.1,29,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்…!
இந்நிலையில் இது குறித்து அறிக்கை தற்போது சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. அதன் படி ரேஷன் கடைகளில் “வைபை” வசதி மேற்கொண்டு இணையதள சேவை வழங்கப்பட உள்ளது. அங்கு பொதுமக்கள் மொபைல் போன், மடிக்கணினி போன்றவற்றை கொண்டு வந்து இணையதள சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் இணையதள சேவைக்கு குறிப்பிட்ட தொகை ரேஷன் கடைகளுக்கு சேவை கட்டணமாக வழங்க வேண்டும். இதன் மூலம் ரேஷன் கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இந்த திட்டமானது சொந்த கட்டடங்களில் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் செயல்படுத்த கூட்டுறவுத் துறை ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.